புத்தகப் பார்வை ஓர் மு(அ)கவரி

 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

எனக்கு தமிழ் மொழியில் முதன்மை ஈடுபாடு வந்ததற்கு முதற்காரணம் புத்தக வாசிப்பு. என் ஞாபகபுழக்கத்தில் சிறுவயது பழக்கமாய் சிறுவர்மலரில் ஆரம்பித்து, வளர வளர இலக்கியம்,அறிவியல் சார்ந்த புத்தகங்கள் என்னை ஈர்த்தது .சரித்திர நாவல்கள் மனித நாகரிகத்தின் மூத்த குடியாகிய பண்டைய தமிழ் சமூகத்தையும், அதன் பெருமைகளையும், பேருண்மைகளையும்  விலாசப்படுத்தின.புத்தகத்தோடு கற்பனைகளில் என்னை நானே மூழ்கடித்து கொள்வது பிடித்த பொழுதுபோக்காய் இருந்தது .ஓவ்வொரு  புத்தகமும் என்னுள் அதீத  தாக்கத்தை ஏற்படுத்தியது மறுக்கமுடியாத உண்மை. தமிழ் வழி புத்தக அறிவியலார்வம்  என்னை முதுநிலை உயிரி தொழில்நுட்பவியல் பட்டதாரியாக்கியது  என்பது பின்னாளில் தெரிந்தது. எத்தனை வருடங்களானாலும் புத்தகம் மீது உள்ள காதல் குறையவே இல்லை. முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சியில் இருக்கும்போதுகூட மீண்டும் ஓர்  புது புத்தகத்தின் வாசனையையே  மனம் தேடுகிறது.ஒவ்வொரு புத்தகமும் அகவாழ்வும் புறவாழ்வும் இணைந்த ஓர் விந்தை  உலகம்.வாசிப்பாளர்கள் அதன் குடிமக்கள். ஓர்  வாசிப்பாளனின் பரவலான  புத்தகப்பார்வையை வெவ்வேறு கோணங்களில்  பன்முக சக வாசிப்பாளர்களுடன்  பகிர்ந்தாலென்ன என்பதே இந்த புத்தக பார்வை இணையத்தின் விலாசம். முத்தாய்ப்பாய், இது எனது முதற் முயற்சி, பிழை இருப்பின் பொறுக்கவும்.நன்றி!!!





கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் பார்வையில் புத்தகம்-1:தண்ணீர் தேசம்

என் பார்வையில் புத்தகம்-3: கல்வெட்டுகள்

என் பார்வையில் புத்தகம்-2: "சிக்மண்ட் ஃபிராய்ட்:கனவுகளின் விளக்கம்"