முதற்புத்தகப்பார்வைக்கு எனது தேர்வு வைரமுத்து ஐயா அவர்கள் எழுதிய கவிதை வடிவில் ஓர் அற்புத அறிவியல் புதினம், தண்ணீர் தேசம். ஏனெனில், இந்த புத்தகத்தை எண்ணற்ற முறை வாசித்தது மட்டுமல்லாது, தமிழ் புனைவுகளில் சற்று வித்தியாசமாக காதலையும் கடலையும் ஒரே சீராக கதைக்களமாக உட்படுத்தியதும்தான். இந்த அருமையான புத்தகம் குறித்து கூற வேண்டுமென்றால் 1996இல் இருந்து 2018 வரை இருபத்தைந்து பதிப்புகள், 24 உட்பகுதிகள் கொண்டது. அட்டைப்படம் நீல திரைக்கடலை பிரதிபலிக்கிறது. அறிவியலும் அரசியலும் தமிழ் இலக்கியத்திற்கு புதிதில்லை என்றாலும், நவீன தமிழ் இலக்கியத்தில் பகுத்தறிவு காதலையும், தமிழ்வழி அறிவியலையும் இந்நூல் ஆவணப்படுத்துகிறது. பண்டைய தமிழ் இலக்கியத்தில் மறைபொருளாக அறிவியல் இருந்தபோதிலும் பெரும்பான்மையான நூல்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. தமிழ் கவினர்களின் நூல்களை மட்டுமல்லாது, வானசாஸ்திரம் மற்றும் கட்டடக்கலைகலாகட்டும், அவைவழி நுணுக்கங்களையும் அவர்களின் நுண்ணறிவையும் எப்போதும் நம்மால் வியக்காமல் இருக்கமுடியாது. அவ்வகை இலக்கியங்கள் மதாச்சார்ய முக்கியத்துவம் பெற்றபோதிலும், அறிவியல் சுரங்கமாய்
கருத்துகள்
கருத்துரையிடுக