முதற்புத்தகப்பார்வைக்கு எனது தேர்வு வைரமுத்து ஐயா அவர்கள் எழுதிய கவிதை வடிவில் ஓர் அற்புத அறிவியல் புதினம், தண்ணீர் தேசம். ஏனெனில், இந்த புத்தகத்தை எண்ணற்ற முறை வாசித்தது மட்டுமல்லாது, தமிழ் புனைவுகளில் சற்று வித்தியாசமாக காதலையும் கடலையும் ஒரே சீராக கதைக்களமாக உட்படுத்தியதும்தான். இந்த அருமையான புத்தகம் குறித்து கூற வேண்டுமென்றால் 1996இல் இருந்து 2018 வரை இருபத்தைந்து பதிப்புகள், 24 உட்பகுதிகள் கொண்டது. அட்டைப்படம் நீல திரைக்கடலை பிரதிபலிக்கிறது. அறிவியலும் அரசியலும் தமிழ் இலக்கியத்திற்கு புதிதில்லை என்றாலும், நவீன தமிழ் இலக்கியத்தில் பகுத்தறிவு காதலையும், தமிழ்வழி அறிவியலையும் இந்நூல் ஆவணப்படுத்துகிறது. பண்டைய தமிழ் இலக்கியத்தில் மறைபொருளாக அறிவியல் இருந்தபோதிலும் பெரும்பான்மையான நூல்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. தமிழ் கவினர்களின் நூல்களை மட்டுமல்லாது, வானசாஸ்திரம் மற்றும் கட்டடக்கலைகலாகட்டும், அவைவழி நுணுக்கங்களையும் அவர்களின் நுண்ணறிவையும் எப்போதும் நம்மால் வியக்காமல் இருக்கமுடியாது. அவ்வகை இலக்கியங்கள் மதாச்சார்ய முக்கியத்துவம் பெற்றபோதிலும், அறிவியல் சுரங்கமாய்
உலகை மாற்றிய 5 புத்தகங்களில் ஒன்றாகிய சிக்மண்ட் ஃபிராய்ட்:கனவுகளின் விளக்கம் மொழிபெயர்ப்பை நான் படிக்க நேர்ந்தது. புத்தக கண்காட்சியில், கனவுகளின் விளக்கம் என்ற தலைப்பே என்னை இந்த புத்தகத்தை வாங்க வைத்தது. அப்படி வாங்கும்போது சிக்மண்ட் அவர்கள் குறித்தோ அல்லது அவரின் கருத்தாக்கம் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. கனவு பற்றி அறிவியல் பூர்வமாக அறிய போகிறோம் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது. ஏனென்றால்,கனவுகள் அழகானவை. ஆழமானவை. சிலசமயம் நம்மை குதூகலப்படுத்தும். பலசமயம் நம்மை குழப்பும். நனவில் நடக்காத நிகழ்வுகள் கனவில் சர்வ சாதாரணமாய் நிகழும்.அதற்கு மாயாஜால உலகம் என்று கூறினால் பொருந்தும். இந்த நிலையில்லாத கனவுகள் காலையில் எழுந்ததும் மறைந்து விடும் அல்லது மறந்தும் விடும். என்னை பொறுத்தவரை கனவு நிஜங்களின் நிழல். நனவு வாழ்க்கையின் எச்சம். கனவுகளுக்கு பொருள் காண்பது ஜோதிடம் போலவே நம் அனைவர்க்கும் பழக்கப்பட்டது, வழி வழியாக பழக்கப்படுத்தப்பட்டது. அறிவியல் பூர்வமாக, உறங்கும்போது மூளையின் விழிப்பு நிலை காரணமாக கனவுகள் தோன்றுகின்றன என்று நாம் அறிவோம். உளவியலில் ஒருபடி மேலே போய் கனவு குறித்து முற்ற
இந்த வார சமூக நிகழ்வுகள் உங்களுக்காக!!!! (இவை யார் மனதையும் புண்படுத்தவதற்காக அல்ல) #தமிழகத்தில் பள்ளி கல்லூரி திறப்பது ஒத்திவைப்பு #தீபாவளி காரணமாக பெருந்தொற்று பரவும் அபாயம் # அரசு பேருந்து கடத்தல் # குழந்தைகள் தினம், நீரழிவு நோய் தினம், நேருஜி பிறந்தநாள் என ஒருங்கிணைந்த சிறப்பு தீப ஒளி திருநாள் நன்றி: PS
கருத்துகள்
கருத்துரையிடுக